Thursday, April 25, 2024

காரணம் கண்டுபிடித்த ஆட்டுக்காரன்

 


கோடி கோடியாய் கொட்டியிருந்தாலும் மோடியே சாலை சீன் போட்டிருந்தாலும் கோவையில் ஆட்டுக்காரன் வெல்ல வாய்ப்பில்லை.

 அந்த உண்மை ஆட்டுக்காரனுக்கும் புரிந்து விட்டது.

 கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காண்பிக்க, தன் தோல்விக்கு ஆட்டுக்காரன் கண்டுபிடித்த காரணம்தான் ஒரு லட்சம் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டனர் என்று அடித்து விட்டுள்ள புதிய அளப்பு.

 


இதையெல்லாம் சங்கிகள் நம்புகிறார்களே, அவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.

 இதைத்தவிர இன்னொரு கதையும் சுற்றிக் கொண்டிருக்கிறது..

 அது பற்றி மாலையில்

Wednesday, April 24, 2024

மோடியை அனுப்பி வையுங்கள்

 


பாஜக கட்சி உறுப்பினர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.

உங்கள் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் பேசும் பேச்சுக்களை கேட்கையில் அவர் மன நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.

அவரை உடனடியாக நல்ல மன நல மருத்துவரிடம் காண்பியுங்கள்.

உங்கள் காலதாமதம் அவரை பாண்டிமடம், குணசீலம், ஏர்வாடி போன்ற இடங்களில் சங்கிலியால் பிணைத்து வைக்கும் அளவிற்குச் செல்லும்.

இல்லையென்றால் மெக்கானிக் முருகன் போல

ஞைஞைஞைஞைஞைஞைஞைஞை 



என்று திரியும் நிலை வரலாம்.

அதனால் அவரை உடனே டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள். வெயில் வேறு அதிகமாக இருக்கிறது.

Tuesday, April 23, 2024

பாடல் படிக்க வைத்த நூல்

 



 அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துக்கள். வாசிப்பை நேசிக்கும் எனக்கு வாழ்த்து சொல்லும் அருகதை இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

 சமீபத்தில் படித்த ஒரு நூல் பற்றிய பகிர்வு.

 ஆடு ஜீவிதம்.

 நூல் வாங்கி இரண்டு வருடங்களுக்கு மேலான பின்பும் படிக்காமல் இருந்த நூல்களின் பட்டியலில் இருந்த நூல் இது.

 இதுவே திரைப்படமாக வெளிவரும் முன்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் “பெரியோனோ, என் ரஹ்மானே” என்ற பாடலைக் கேட்டேன். அநேகமாக மீண்டும் மீண்டும் கேட்ட புதிய பாடல் இதுதான். இதற்கு முன்பாக அப்படி கேட்டது பொன்னியின் செல்வன் 2 படத்தின் “வீரா தீரா” பாடல்.

 அந்த பாடலை கேட்டவுடன் பயணப் பையில் இந்நூலை எடுத்து வைத்துக் கொண்டேன்.

 இம்மாத துவக்கத்தில் ஒரு இரண்டு மணி நேர பயணம். சென்ற இடத்தில் ஒரு மூன்று மணி நேரம் காத்திருந்து போன வேலை நடக்காமல் வெட்டியாய் திரும்பி வந்தேன்.

 ஆனாலும்  அந்த பயணத்தை பயனுள்ளதாய் மாற்றியது ஆடு ஜீவிதம்.

 திரைப்படமாக வந்ததால் கதை அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் சுருக்கமாக சொல்லியாக வேண்டும்.

 குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்து வளமான வாழ்வு வாழலாம் என்ற நம்பிக்கையோடு சவுதிக்குப் புறப்படுகிறான் நஜீப். அவனுக்கான முதல் அதிர்ச்சி விமான நிலையத்தில் கிடைக்கிறது. ஒரு மோசமான ஓட்டை வாகனத்தில் நாற்றமடிக்கும் உடை அணிந்த ஒருவன் அவனை அழைத்துச் செல்கிறான்.

 எங்கே? எதற்கு?

 பாலைவனத்துக்கு நடுவில் இருக்கிற ஆட்டுத் தொழுவத்திற்கு. ஆடு மேய்க்கும் வேலைக்கு.

 பயிர்கள் இல்லாத பாலைவனத்தில் ஆடுகள் எதை மேயும் என்ற கேள்வி வருகிறதல்லவா?

 ஆடுகளை தொழுவத்திலிருந்து நடக்க வைத்து பின் கூட்டி வருவதுதான் வேலை. அப்படி நடக்காவிட்டால் ஆடுகளுக்கு நோய்கள் வருமென்பதால் அந்த ஏற்பாடு.

 நஜீபோடு இன்னொரு பணியாள். அவனும் அழுக்கான ஆடைகளோடு பார்க்கக் கொடூரமாக இருக்கிறான். சில நாட்கள் கழித்து காணாமல் போகிறான்.

 முகம் கழுவ தண்ணீரை பயன்படுத்தியதெற்கெல்லாம் பெல்ட்டால் அடித்து சாப்பாடு கொடுக்காமல் எஜமானன் செய்யும் சித்திரவதைகளை முதலில் தாங்க முடியாத நஜீபிற்கு பின் அதுவே பழகி விடுகிறது. ஆடுகளை நேசிக்க தொடங்குகிறான். பெயர் வைக்கிறான். அவை வெட்டுக்கூடத்திற்கு செல்லும் போது கலங்குகிறான்.

 வாழ்நாள் முழுதும் பாலைவனத்திலேயே முடிந்து விடுமோ என்று அஞ்சும் நஜீபிற்கு தப்பித்துச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. பாலைவனத்தில் நடந்து நடந்து நடந்து நடந்து ஒரு வழியாக நகரத்தை வந்தடைகிறான். தாய்நாடு திரும்புவதற்கான வழிமுறையாக தானே கைதாகிறான்.

 தப்பித்துச் சென்ற வேலையாட்களை சிறையில் முதலாளிகள் தேடிப்பிடுத்து மீண்டும் இழுத்துச் செல்வார்கள், குறிப்பிட்ட காலம் வரை யாரும் வராவிட்டால் தூதரகம் மூலம் தாய்நாடு திரும்பி விடலாம். இந்த நாள் கழிந்து விட்டாக் சுதந்திரம் என்று நம்பிக்கையோடு காத்திருக்கும் நஜீபின் கனவுகளை தகர்க்கும் வண்ணம் அன்றுதான் நஜீப்பை  விமான நிலையத்திலிருந்து இழுத்துச் சென்ற மனிதன் வருகிறான். நஜீபின் இதயம் துடிக்கிறது. அவன் கண்டுகொள்ளவில்லை. ஒரு வழியாய் துயரம் முடிந்து போகிறது.

 முன்பின் தெரியாத இடத்தில் சிக்கிக் கொண்டும் தப்பிக்கும் போதும்  பல சித்திரவதைகள் அனுபவித்தாலும் வாழ வேண்டும் என்ற வேட்கை நஜீபிற்கு குறையவே இல்லை.  அந்த வேட்கைத்தான் நஜீபை காப்பாற்றியது. பிரச்சினைகள் எதுவானாலும் நம்பிக்கையோடு எதிர்கொண்டால் அதிலிருந்து வெளி வர முடியும் என்பதுதான் நூல் சொல்லும் செய்தி. முக்கியமான செய்தி.

 ஒரு உண்மை நிகழ்வை பென் யாமின் நாவலாக கொடுத்துள்ளார். விலாசினி ரமணி நூலின் உணர்வுகளை படிப்பவர்கள் நெஞ்சு படபக்கும் படி தமிழாக்கம் செய்துள்ளார். இருவருக்கும் பாராட்டுக்கள். ஒரு நிமிடம் கூட சலிப்பு வராமல் நூலின் நடை உள்ளது. அதனால்தான் பயணம் வெட்டியாக முடிந்தாலும் எரிச்சல் இல்லாமல் நேரம் கழிந்தது.

 நூல் படித்து கிடைத்த உணர்வை இழக்க விரும்பாததால் திரைப்படத்திற்குச் செல்லவில்லை.

பிகு : 

பாடலையும் கேட்டு விடுங்களேன்.



மோடியின் "படுத்தே விட்டானய்யா" மொமெண்ட்

 


தன்னைப் போல ஒரு கேவலமான, அற்பத்தனமான, கேடு கெட்ட ஜந்துவை உலகம் பார்த்திருக்க முடியாது என்பதை ஒவ்வொரு நாளும் நமக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறது பிரதமர் என்ற பெயரில் இந்தியாவுக்கு நிகழ்ந்த துரதிர்ஷ்ட விபத்து.

நேற்று முன் தினம் கான்பூரில் பேசுகையில் 

"காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியைக் கூட பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள்" 

என்று அயோக்கியத்தனமாக பேசிய அதே ஜந்து

நேற்று அலிகாரில் பேசுகையில்

"அதிகமான எண்ணிக்கையில் முஸ்லீம்கள் ஹஜ் போக நாந்தான் சவுதி இளவரசரோடு பேசினேன். ஆண் துணை இல்லாமல் பெண்களும் தனியாக போக வழி செய்தேன், முத்தலாக்கை ஒழித்து முஸ்லீம் பெண்களின் ஆசியைப் பெற்றேன் (இவரால் தள்ளி வைக்கப்பட்டு வாழ்விழந்த யஷோதா பென் நினைவுக்கு வருகிறார்)"

என்றெல்லாம்  பேசி விட்டு போயுள்ளார்.



இதனால் இந்த ஜந்து திருந்தி விட்டதா என்றெல்லாம் சிந்திக்காதீர். எந்த அடிப்படை அறமும் இல்லாமல் பதவிக்காக எந்த அளவும் கீழிறங்கும் தரங்கெட்ட ஜந்து.

"படுத்தே விட்டானய்யா" மொமெண்ட் நேற்று. 

இன்று எங்கே என்ன விஷத்தை கக்குகிறது என்பது மாலைக்குள் தெரிந்து விடும்.


Monday, April 22, 2024

மோடியின் பேச்சு அயோக்கியத்தனமாது.

 


தோல்வி பயம் மோடிக்கு வந்து விட்டது.

 முதல் முறை பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தார்.

 புல்வாமாவில் எல்லைப் பாதுகாப்புப்ப்டை வீரர்கள் கொல்லப்படுவதை அனுமதித்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தார்.

 இனி பொய்களையும் அள்ளி விட முடியாது. ராணுவ வீரர்களையும் சாகடிக்க முடியாது.

 அதனால் மோடி கையிலெடுத்திருப்பது மத வெறிப் பேச்சு.

 “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்  நாட்டு மக்களுடைய செல்வத்தை எல்லாம் பிடுங்கி  இஸ்லாமியர்களிடம் கொடுத்து விடுவார்கள்”

 காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பேசினார்கள், தேர்தல் அறிக்கையில் உள்ளது என்று அவர் சொல்லும் விஷயங்களுக்கு அவரிடம் எந்த தரவுகளோ, ஆதாரங்களோ கிடையாது.

 வாய்க்கு வந்ததை அடித்து விட்டுள்ளார். ஆனால் அது ஆபத்தானது. பிளவு படுத்தும் நோக்கமுடையது. ஒற்றுமையை குலைக்கக் கூடியது. வாக்காளர்கள் மனதில் குழப்பத்தை  உருவாக்கக்கூடியது. வெறுப்பை விதைக்கும் விஷம். மொத்தத்தில் அயோக்கியத்தனமானது.

 இந்த அயோக்கியத்தனமான பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பது மட்டும் போதாது. மோடியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மோடியால் பொறுக்கி எடுக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் அதை செய்ய மாட்டார்கள். அதனால் மக்கள்தான் மோஈடியை முறியடிக்க வேண்டும்.

 

இளையராஜா - நீனா சிமோன் ஒப்பீடு நியாயமில்லை

 


பெல்ஜியம் வாழ் தோழர் இ.பா.சிந்தன்  அவர்களின் முக்கியமான பதிவை அவருக்கு அனுதாபம் தெரிவித்து பகிர்ந்து கொள்கிறேன். இளையராஜாவின் கடினச்சாவு விசிறிகளை மட்டுமல்லாமல் பா.ரஞ்சித் ரசிகர்களையும் சீண்டி விட்டார். என்ன ஆகப் போகிறாரோ?

எழுதவேண்டிய அவசியம் இருப்பதால், கொஞ்சம் சர்ச்சையான பதிவு என்று தெரிந்தேதான் எழுதுகிறேன்.

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் துவக்கத்தில் ஒரு உரையாடல் காட்சி வரும்.

அதில் இளையராஜாவை இனியன் (காளிதாஸ்) போன்றவர்கள் கொண்டாடுவதில்லை என்று ரெனே (துசாரா விஜயன்) சொல்வதாக விவாதம் நடக்கும். ஒரு கட்டத்தில் அந்த உரையாடலில், "எங்கயோ இருக்குற நீனா சிமோனைக் கொண்டாடுவ. ஆனா இளையாராஜாவக் கொண்டாட மாட்டியா?" என்று ரெனே சொல்வதாக ஒரு வசனம் வரும். அந்த வசனம் எனக்கு ஒரு திணிப்பாகத்தான் தெரிந்தது. படம் வந்தபோதே இதுகுறித்து எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படம் குறித்து வேறொரு திசையில் விவாதம் நடந்துகொண்டிருந்தபடியால் இதுகுறித்து நான் பேசுவது சரியாக இருக்காது என்று விட்டுவிட்டேன்.

அந்த வசனம் குறித்து இரண்டு கருத்துகளை சொல்ல நினைக்கிறேன்.

ஒன்று, இளையராஜா இங்கே கொண்டாடப்படவில்லை என்று சொல்வது இளையராஜாவின் ஒருசில அதிதீவிர ரசிகர்களைத் தவிர வேறு யாருமில்லை. சுமார் 30 ஆண்டுகளாக தமிழ்த்திரையுலகை தன்னந்தனியாக ஆண்டுகொண்டிருந்தவர் இளையராஜா. அவருடைய பெயருக்காகவும் இசைக்காகவும் இங்கே ஓடிய படங்கள் நூற்றுக்கணக்கில் உண்டு. எல்லா இசைக் கருவிகளுக்கும் நேரடியாக இசைக் குறிப்பெழுதி பாடலை உருவாக்கிய கடைசி இசையமைப்பாளர் என்று தைரியமாக அவரைக் குறிப்பிடலாம். இன்றைக்கு மட்டுமல்லாமல் காலத்திற்கும் ராஜாவின் இசை நிலைத்து நிற்கத்தான் போகிறது. அவரது பெயரும் புகழும் என்றென்றைக்கும் அழியாதவை. அவர் கொண்டாடப் பட்டிருக்காவிட்டால், அவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகளோ இவ்வளவு பெரிய பெயரோ கிடைத்திருக்குமா? அதனால் ராஜா கொண்டாடப்படவில்லை என்று சொல்லி, போகிற வருகிறவர்களை எல்லாம் கடித்துவைப்பதால் ராஜாவுக்குத்தான் இந்த சிலர் இழுக்கு ஏற்படுத்துகிறார்கள்.

இரண்டாவது, நீனா சிமோனைக் கொண்டாடுவதற்கு பதிலாக ராஜாவை மட்டும் கொண்டாட வேண்டும் என்று சொல்வது என்ன வகையில் சரியென்று தெரியவில்லை. அப்படிச் சொல்பவர்களுக்கு நீனா சிமோன் யாரென்று தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை.

இசை மன்னராக ராஜாவை முழுமையாக ஏற்கிறேன். உலக இசை வரலாற்றில் ராஜாவுக்கு எப்போதும் ஒரு இடமுண்டு. ஆனால் அதற்காக நீனா சிமோனுடன் எல்லாம் ஒப்பிடுவது எவ்வகையிலும் சரியான ஒப்பீடல்ல. அமெரிக்காவில் நம்பர் ஒன் இசையைக் கொடுத்து, மில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் நிலையில் இருந்த நீனா சிமோன், தான் வாழ்ந்த காலத்தில் கருப்பின மக்களுக்கு எதிராக அமெரிக்க வெள்ளையின ஆதிக்கம் நிகழ்த்திவந்த கொடூரங்களை எவ்விதத் தயக்கமும் இன்றி எதிர்க்க முன்வந்தார். 1960 களில் அவருடைய பாடல் இடம்பெறாத கருப்பின மக்கள் போராட்டமே இல்லை எனலாம். "மிசிசிப்பி காட் டேம்" என்று அவர் எழுதி இசையமைத்துப் பாடிய பாடல், சுற்றிவளைத்தெல்லாம் இல்லாமல் நேரடியாகவே வெள்ளையின ஆதிக்கத்தை ஓங்கியடித்தது. அவரது "Ain't got no, I got life" பாடல் ஒரு கருப்பினப் பெண்ணின் வாழ்க்கையைப் பேசும் பாடலாக பாடப்பட்டது. இன்றுமே கூட இவ்விரு பாடல்களும் அமெரிக்க கருப்பின மக்களின் வாழ்க்கை நிலைக்கு அப்படியே பொருந்திப் போவதாக இருக்கிறது.

"என்னுடைய வரிப்பணத்தில் வியட்னாமில் போர் நடத்தி அப்பாவி மக்களைக் கொல்வதா? அதற்கு அனுமதிக்கமாட்டேன்" என்று சொல்லி வரிகட்ட மறுத்தார் நீனா சிமோன்.

"மிசிசிப்பி காட் டேம்" என்கிற ஒரு பாடலுக்காகவே அமெரிக்க வெள்ளையின ஆதிக்க இசைத்துறை, நீனா சிமோனைப் பழிவாங்கியது. அவருடைய அடுத்தடுத்த பாடல்களை வெளியிட மறுத்தது. அவரை அமெரிக்க இசை வரலாற்றிலிருந்தே விரட்டியடித்தது. ஆனால், அதற்காகவெல்லாம் ஆளும் வர்க்கத்திடம் நீனா சிமோன் ஒருபோதும் அடிபணியவே இல்லை. அதன்பிறகு அவருடைய இசைப் பாடல்களை பெரியளவிற்கு விற்க எவரும் முன்வரவில்லை என்ற போது கவலையேபடாமல், கருப்பின மக்களின் உரிமைக்காக இறுதிவரை போராடியவர் நீனா சிமோன்.

ஆனால், ராஜாவோ, இன்றைய கொடும் பாசிச காலத்தில், வெறிபிடித்தாடும் சங்கியத்தை எதிர்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை, அதனோடு கூட்டுசேராமலாவது இருக்கலாம்தானே.

"தான் வாழும் காலத்தின் அரசியலைக் கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள் கலைஞர்களே இல்லை" என்றார் நீனா சிமோன். ஆனால், ராஜாவோ ரங்கராஜ் பாண்டேவோடுதான் எப்போது மேடையேறுகிறார். அம்பேத்கரும் மோடியும் ஒன்று என்கிறார். அவர்கள் கொடுத்த எம்பி பதவியை ஏற்றுக்கொள்கிறார்.

ராஜா என்றென்றைக்கும் மக்கள் மனங்களில் இசையரசர்தான். ஆனால், அதற்காகவெல்லாம் ஒட்டுமொத்த சமத்துவத்திற்காக எல்லா இழப்புகளையும் சந்திக்க நேரிட்டும் உறுதியாக இறுதிவரைப் போராடி மறைந்த நீனா சிமோனையெல்லாம் தாழ்த்திப் பேசாதீர்கள்.

இன்று நீனா சிமோனின் நினைவு நாள்.

Sunday, April 21, 2024

பாஜகவில் நேர்மை இல்லை --சங்கி ஒப்புதல்

 


மதுரையில் பாஜக வேட்பாளராக தோற்றுப்போன போலிப் பேராசிரியர் ராம.சீனு பேசிய காணொளி கீழே உள்ளது.


இது கண்டிப்பாக புதிதல்ல. பழைய வீடியோ இது என்பது எனக்கும் நன்றாகத் தெரியும். அதனால் இது பழசு என்று எந்த அனாமதேயமோ போலிப் பெயர் உளவாளி துரோகிகளோ பின்னூட்டம் இட வேண்டாம்.

என் கருத்து ஒன்றுதான்.

நேர்மையான தலைவர் என்றால் சங்கியால் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு தலைவரைத்தான் உடனடியாக சொல்ல முடிகிறது. கம்யூனிஸ்டுகள்தான் நேர்மையோடு இணைக்கப்பட்டுள்ளனர்.

அவரால் ஆட்டுக்காரன் பெயரையோ, பொன்னார், டமில் மூசிக் என்றோ சொல்ல முடியவில்லை அல்லவா! அது போதும்,