Friday, January 3, 2014

இதை படமெடுக்காவிட்டால் எப்படி?

சமீபத்தில்  ஒரு வகுப்பிற்காக பாபனாசம் சென்றிருந்தேன். அப்போது
கிடைத்த இடைவெளியில் அகஸ்தியர் நீர் வீழ்ச்சி, காரையார் அணை,
தாமிர பரணியில் படகுச் சவாரி சென்று பாண தீர்த்தம் நீர் வீழ்ச்சி
சென்றிருந்தேன்.

இயற்கையின் எழில் கொஞ்சும் காட்சிகளை  என் காமெராவில் 
படமெடுத்து இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நான் காமெராவும் கையுமாக அலைபவன்தான். இயக்கங்களை
பதிவு செய்து ஆவணப்படுத்துவது என்பது ஒரு அவசியமான கடமை.
அதே போல் இயற்கையின் வனப்பை படம் பிடிப்பது என்பது 
எதிர்காலத் தலைமுறைக்கு அளிக்க வேண்டிய கொடை.

இன்னமும் வணிகமயமாகாத, சுரண்டல் கொள்ளைக்காரர்கள்
முழுமையாக நுழையாத பாபனாசம் பகுதியின் அழகை நீங்களும்
ரசியுங்கள்,

புகைப்படத்தில் மட்டும் அல்ல. நேரிலும் சென்று.






























 

No comments:

Post a Comment