Sunday, July 5, 2015

சிறியதாயினும் சிறப்பு



ஹிந்து பத்திரிக்கையில் ஒரு செய்தி. பெரம்பலூர் மாவட்டத்தில் பிரஷாந்த் என்ற மாணவர் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் சிரமப்படுவதாக வந்த அந்த செய்தியை படித்த அகில இந்திய இன்சூரன்ஸ் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம், எங்களது தஞ்சைக் கோட்டச் சங்கத்தின் தலைவர் தோழர் ஆர்.புண்ணியமூர்த்தியை தொடர்பு கொண்டு" ஏதாவது உதவ முடியுமா பாருங்களேன்" என்று சொல்கிறார்.

தஞ்சைக் கோட்டச் சங்கத்தின் தோழர்களும் உடனே செயல்பட்டு அந்த மாணவனை தொடர்பு கொண்டு முப்பதாயிரம் ரூபாய் நிதி அளித்து பிரஷாந்த் கல்லூரியில் கட்டணம் செலுத்த உதவினார்கள்.

நேற்று தஞ்சையில் நடைபெற்ற எங்கள் சங்க விழாவில் அந்த மாணவனுக்கு நினைவுப் பரிசளித்த சால்வை போட்டு கௌரவித்தார்கள். மிகுந்த மன நிறைவினைக் கொடுத்த நிக்ழ்வு இது. 

பின் குறிப்பு : இது மிகச் சிறிய உதவி என்று தஞ்சைக் கோட்டத்தின் தலைவர் தோழர் ஆர்.புண்ணியமூர்த்தியும் பொதுச்செயலாளர் தோழர் எஸ்.செல்வராஜும் அழுத்திச் சொன்னதால் "சிறியதாயினும்" என்று தலைப்பு கொடுத்துள்ளேன்.

ஆனால் வள்ளுவர் சொன்னது போல காலத்தே செய்த அந்த உதவி மண்ணை விட மகத்தானது, விண்ணை விட சிறப்பானது.

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பாரம்பரியம் இதுதான்.

2 comments:

  1. பாராட்டிற்குரிய செய்தி ஐயா
    தஞ்சாவூர் இன்சூரன்ஸ் சங்கத்தினைப் போற்ற வேண்டும்
    போற்றுவோம்
    நன்றி

    ReplyDelete
  2. oru pakkam panaththai kaiyil vaithukkondu kuraivaana marks edutha makan/makalukku
    donation katti medicine padikkavaikka oru kuttam irukka,
    athika mathippenkal eduthum arasu kalluriyil padippai thodara mudiyaamal irukkum maanavarkalai paarthal
    varuthamaaka irukkirathu.


    maanavanukku uthaviya anaivarukkum vazthukkal sir.

    ReplyDelete